Siragadikka Aasai: சீதாவின் திருமணத்திற்கு பரபரப்பாக மாப்பிள்ளை பார்க்கும் முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவிற்கு திருமணமானது தெரியாமல் முத்து திருமண தகவல் மையத்திற்கு சென்று முத்துவிற்கு மாப்பிள்ளை பார்க்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
சீதாவிற்கு யாருக்கும் தெரியாமல் மீனா ரகசிய திருமணம் செய்து வைத்துள்ள நிலையில், இதனை அறியாத முத்து மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளார்.
இதனால் திருமண தகவல் மையத்திற்கு சென்ற நிலையில், அங்கு சீதாவிற்கு நல்ல வரன் இருப்பதாக கூறி அருணின் அம்மாவை அழைக்கின்றனர்.
கடுப்பான முத்து அங்கிருந்து வெளியே வந்துள்ளார். ஆனால் முத்துவின் நண்பர் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க அவரும் மனதை மாற்றி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |