Siragadikka Aasai: மீண்டும் சீதாவின் காதலனுக்கு முத்து வைத்த ஆப்பு! வேலை பறிபோகுமா?
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து திருடன் ஒருவனிடமிருந்து நகையை மீட்ட நிலையில், அருண் தான் செய்ததாக கூறி பதவி உயர்வை பெற்றுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்துள்ளார். ஆனால் அனைவரையும் சமாதானப்படுத்துவதற்கு, சில குள்ளநரி வேலையையும் பார்த்து வருகின்றார்.
மற்றொரு புறம் சீதா, அருண் காதலுக்கு முத்து எதிராக நிற்கும் நிலையில், இன்று மீண்டும் இருவரும் மோதியுள்ளனர். அதாவது திருடன் ஒருவன் பெண்ணின் நகையைப் பறித்துச் சென்ற நிலையில் முத்து அதனை மீட்டுள்ளார்.
ஆனால் சீதாவின் காதலர் அருண் தான் அதனை மீட்டதாக கூறி பதவி உயர்வை பெற்றுள்ளார். பின்பு நடைபெற்ற நிகழ்வு அருணை அசிங்கப்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |