Siragadikka Aasai: மீனாவின் பணத்தை அசால்ட்டாக கைப்பற்றிய முத்து! ஏமாற்றத்தில் சிந்தாமணி
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவின் பணத்தை அடித்துச் சென்ற சிந்தாமணிக்கு முத்து சரியான பாடம் கற்பித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.
இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா விடயத்தில் விஜயா சிந்தாமணியுடன் சேர்ந்து குடைச்சல் கொடுத்து வருகின்றார்.
சமீபத்தில் ஆர்டருக்கு தயார் செய்த பணத்தை அடிப்பதற்கு விஜயா திட்டம் போட்டு கொடுத்துள்ளார். பணத்தை தொலைத்த மீனாவின் கவலையை முத்து காணாமல் போக்கியுள்ளார்.
தனது நண்பன், ரவி, ஸ்ருதி இவர்களை வைத்து அப்பணத்தை சிந்தாமணி வீட்டிலிருந்து முதது அசால்ட்டாக கைப்பற்றியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |