Siragadikka Aasai: முத்து கூறிய உண்மையால் விஜயாவிடம் சிக்கிய ரோகினி! தற்போதைய ப்ரொமோ
சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ள நிலையில், மனோஜ் குறித்த உண்மையை முத்து வீட்டில் கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயாவின் நடனபள்ளிக்கு வந்த காதல் ஜோடிகள் தவறு செய்து கர்ப்பமாகிய நிலையில், அவரது உறவினர்கள் வீட்டில் வந்து பிரச்சனை செய்தனர்.
இதனை சரிசெய்து விஜயாவிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு மனோஜை காதல்ஜோடி வீட்டில் சென்று பேசுமாறு ரோகினி கூறியுள்ளார்.
அங்கு சென்று கருவை கலைத்துவிடுங்கள் என்றும் பணம் தருகின்றேன் என்றும் பேசியதால் மனோஜை கட்டிப்போட்டு வைத்ததுடன், ரோகினியையும் அடைத்து வைத்துள்ளனர்.
பின்பு முத்து இருதரப்பினரையும் அழைத்து சுமூகமாக பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளதுடன், மனோஜ் ரோகியினையும் அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த காதல்ஜோடியின் குடும்பத்தினர் விஜயாவின் தோழி வீட்டிற்கு வந்து, 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தரவில்லை என்றால் போலிசாரிடம் கூறிவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் அலறியடித்து வீட்டிற்கு வந்து நடந்ததை விஜயாவிடம் அவரது தோழி கூறியுள்ளார். உடனே முத்து இதற்கு காரணம் மனோஜ் தான் என்று நடந்த விபரத்தைக் கூறியுள்ளார்.
உடனே மனோஜ் தான் தப்பிப்பதற்கு ரோகினியை மாட்டிவிட்டுள்ளார். தற்போது ரோகினி மீது மீண்டும் விஜயாவிற்கு கோபம் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |