Siragadikka Aasai: ஏங்க இங்க வாங்க... எமன் என்னையை பிடிக்க வந்துருக்கு! நடுநடுங்கிய விஜயா
சிறகடிக்க ஆசை விஜயாவை அழைத்துச் செல்ல எமர்தர்மன் வந்துள்ளதாக பயத்தில் மூழ்கியுள்ளார். ஆனால் கடைசியில் முத்து என்று தெரிந்ததும் விஜயா நீயா என்று கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைத்துள்ளார். மற்றொரு புறம் சீதா அருண் காதலுக்கு முத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் விஜயாவை ஜோதிடர் ஒருவர் எமதர்மன் அழைக்க வாசலில் நிற்பதாக கூறியுள்ளார். ஆனால் இந்த ஜோதிடரை ஏற்பாடு செய்துள்ளதே விஜயாவின் தோழி தான்.
இவரிடம் ரோகினி தான் ஐடியா கொடுத்துள்ளார். அதாவது மனோஜ் ரோகினியை ஒன்று சேர்ப்பதற்காக இவ்வாறு திட்டமிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |