Siragadikka Aasai: சீதாவின் காதலுக்கு பச்சைக் கொடிய காட்டிய முத்து! திடீர் திருப்பம் ஏன்?
சிறகடிக்க ஆசை சீரியலில் சீதாவின் காதலுக்கு முத்து பச்சைக்கொடி காட்டியது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
வீட்டில் பொய் கூறி வாழ்ந்து வந்த ரோகினியை மனோஜ் மற்றும் விஜயா ஒதுக்கி வைக்கப்பட்ட ரோகினி தற்போது திருட்டு செயினால் விஜயாவிடம் மாட்டிக் கொண்டார்.
சீதா தனக்கு அருண் தான் வேண்டும் முத்துவிடம் பகிரங்கமாக கூறியுள்ள நிலையில், முத்து மனம் மாறியது போன்று காட்டப்பட்டுள்ளது.
சீதாவிடம் அருண் குடும்பத்தினரை பெண் பார்க்க வர கூறியுள்ளார். உடனே சீதா மட்டுமின்றி குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
