Siragadikka Aasai: குடித்துவிட்டு தகராறு செய்த முத்து... போலிசாரிடம் வசமாக சிக்கிய தருணம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ட்ராபிக் போலிஸ் தனது காரையும், ஓட்டுனர் உரிமத்தையும் பறித்ததால், முத்து குடித்துவிட்டு தகராறு செய்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி கூறிய பொய்யில் மலேசியா மாமா குறித்த உண்மை அம்பலமாகிய நிலையில், விஜயா ரோகினியை மனோஜிடம் இருந்து பிரிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.
சிட்டியுடன் கூட்டணி சேர்ந்து ரோகினி முத்துவை விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டு, இதனால் போலிசாரிடம் முத்து மாட்டியுள்ளார்.
முத்துவின் காரை மீட்பதற்கு மீனா முயற்சித்த தருணம் முத்து தனது நண்பர்களுடன் குடித்துவிட்டு, ட்ராபிக் போலிஸ் வீட்டில் தகராறு செய்துள்ளார்.
இதனால் முத்துவையும் போலிசார் கைது செய்வதற்கு கூறியுள்ள நிலையில், மீனா செய்வது அறியாமல் தவித்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |