Siragadikka Aasai: சஸ்பெண்ட் ஆகிய அருண்... எதிரும் புதிருமான மீனா மற்றும் சீதா
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து செய்த நல்ல விடயத்தினால் அருணுக்கு சஸ்பெண்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், சீதா உச்சக்கட்ட கோபத்தில் மீனாவிடம் சண்டை போட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பயங்கர எதிர்பார்ப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. நடுத்தர குடும்ப வாழ்க்கையில் எழும் சண்டையினை முத்து, மீனா இருவரும் எவ்வாறு எதிர்கொண்டு செல்கின்றனர் என்பதை காட்டுகின்றது.
தற்போது முத்து விபத்தில் சிக்கிய பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இடத்தில் இருந்த சீதாவின் கணவர் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், குற்றவாளியை விரட்டிச் சென்றுள்ளார்.
இதனால் சமூக வலைத்தளங்கள் முத்துவை பயங்கரமாக கொண்டாடி வரும் நிலையில், அருண் தனது வேலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சீதா மீண்டும் மீனாவிடம் வந்து சண்டை போடுகின்றார். மேலும் முத்துவை மன்னிப்பு கேட்டகவும் செய்கின்றார். ஆனால் இதற்கு மீனா சம்மதிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |