மீனாவை கிளறி விட்ட ரோகிணி.. கோபத்தில் அறைந்த முத்து- சூடுபிடிக்கும் சீரியல்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவால் தான் மீனா அவருடைய அம்மாவின் வீட்டிற்கு செல்கிறார் என ரோகிணி கூறும் மீனாவுக்கு அடக்க முடியாமல் கோபம் வந்து விடுகிறது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது.
சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை எடுத்துக் காட்டும் விதமாக எடுக்கப்படும் இந்த சீரியலில் முத்துவை விட ரோகிணி மிக முக்கியமான கதாபாத்திரம்.
ஏற்கனவே திருமணமாகி தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை மறந்து, தனக்கானவொரு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனோஜை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

க்ரிஷை வளர்க்க முடியாமல் ரோகிணியின் அம்மா பல வழிகளில் கெஞ்சி போராடி பார்க்கிறார். ஆனாலும் ரோகிணி மனம் இறங்கி உண்மைகளை அவருடைய வீட்டில் கூறுவது போன்று இல்லை.
என்ன நடந்தாலும் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதில் ரோகிணி தெளிவாக இருக்கிறார்.
மீனாவை கிளப்பி விட்ட ரோகிணி
இந்த நிலையில்,ரோகிணி அவருடைய அப்பாவுக்கு காரியம் செய்யும் பொழுது மீனா பார்த்து விடுகிறார். அதன் பின்னர், ரோகிணி பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு, ரோகிணியை கண்டிக்கிறார்.
இதனை தடுக்க நினைக்கும் ரோகிணி அவருடைய இறப்பு நீங்கள் சொல்லப்போகும் உண்மையில் தான் இருக்கிறது என மீனாவின் நல்ல உள்ளத்தை ரோகிணி பயன்படுத்திக் கொள்கிறார்.

ஆனாலும் மீனாவிற்கு குடும்பத்திலுள்ளவர்களை ஏமாற்ற மனம் வரவில்லை. இதனால் வீட்டில் சோகமாகவும், குழப்பமாகவும் மீனா இருக்கிறார். வீட்டிலுள்ளவர்களின் முகத்தை பார்த்துக் கொண்டு அவர்களை ஏமாற்ற முடியாது என்ற முடிவுக்கு வந்த மீனா அவருடைய அம்மா வீட்டுக்கு கிளம்புவதாக முடிவு செய்து, மாமனாரிடம் கூற அதற்கு முத்துவுடன் சண்டையால் மீனா கிளம்புகிறார் என புது கதையை எடுத்து விடுகிறார்.
ரோகிணியின் பொய்யை பொறுத்துக் கொள்ள முடியாத மீனா என்ன சொல்லப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |