Siragadikka Aasai: மீனாவின் ஆர்டரை தட்டிப்பறித்த சிந்தாமணி... முத்து கண்டுபிடித்த உண்மை
சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி மீனாவின் ஆர்டரை தட்டிப்பறித்த நிலையில், முத்துவிற்கு சந்தேகம் ஏற்பட்டு, பணத்தை திருடியவரை தேடி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.
இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா அடுத்த ஆர்டருக்கு பணத்தை ஏற்பாடு செய்த நிலையில், இதனை சிந்தாமணி ஆட்களை அனுப்பி தட்டிப் பறித்துள்ளார்.
பின்பு மீனா வராததால் ஆர்டர் சிந்தாமணி கைக்கு சென்றுள்ளது. மீனாவிடம் விசாரித்து நடந்ததை அறிந்து கொண்ட முத்துவிற்கு தற்போது சிந்தாமணி மீது சந்தேகம் எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
