Siragadikka Aasai: கல்யாணி தான் ரோகினியா? மீனா, முத்துவிடம் கொத்தாக மாட்டிய உண்மை
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா மற்றும் முத்துவிடம் ஆதாரம் ஒன்று சிக்கியுள்ள நிலையில், இதனால் ரோகினியை சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம்.
முத்து மற்றும் மீனா இருவரின் எதார்த்தமான நடிப்பு, இன்றைய குடும்ப சூழல், குடும்பம் பிரியாமல் இருப்பதற்கு அவர்கள் மேற்கொள்ளும் சில தியாகங்கள் என கதை செல்கின்றது.
முத்துவை அவரது அம்மாவிற்கு பிடிக்காத நிலையில், என்ன நல்லது செய்தாலும் திட்டு வாங்கிக்கொண்டே இருக்கின்றனர் முத்து மற்றும் மீனா.
தற்போது ரோகினியின் தோழி வித்யாவிற்கும், முருகனுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படத்தினை மீனா முத்து அவதானிக்கின்றனர்.
மேலும் திருமணத்தின் போது ரோகினி தனது முதல் கணவரின் சொந்தக்காரரை சந்தித்து பிரச்சனையில் சிக்கியுள்ளார். ஒருவழியாக அதனை சமாளித்துவிட்டு வீட்டிற்கும் ரோகினி வந்த நிலையில், தற்போது முத்து மீனா கையில் சிக்கிய ஆதாரம் ரோகினியை நடுநடுங்க வைத்துள்ளனர்.
திவ்யாவிற்கு இல்லாத சித்தியை ரோகினி கொண்டு வந்தது மீனாவிற்கு ஏற்கனவே சந்தேகத்தை கிளப்பியுள்ள நிலையில், இந்த திருமணத்திற்கு ரோகினியின் அம்மா வந்து சென்றதையும் அவதானித்துள்ளனர்.
இதனால் தற்போது இருவருக்கும் சந்தேகம் பயங்கரமாக அதிகரித்துள்ள நிலையில், ரோகினி குறித்த உண்மை எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |