Siragadikka Aasai: மீனா கொடுத்த சர்ப்ரைஸ்... ஏக்கத்தில் முத்து செய்த காரியம்
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் வீட்டிற்கு மீனா வந்து சமையல் செய்துவிட்டு ஸ்ருதி அறையில் மறைந்திருக்கும் நிலையில், முத்து பரிதாபமாக அவரைத் தேடியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், அவரிடமிருந்து தப்பிக்க ஸ்ருதி அம்மாவிடம் பணம் வாங்கியுள்ளார்.
இதனால் ஸ்ருதியின் அம்மா ஸ்ருதியிடம் கூறியுள்ளதுடன், ரோகினி நீத்துவை சென்று சந்தித்த விடயம் ரவிக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முத்துவிற்கு தெரியாமல் மீனா தங்கைக்கு திருமணம் செய்து வைத்ததால், அவரை வீட்டைவிட்டு அம்மா வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
குடிபோதையில் அவ்வாறு கூறிய நிலையில், தற்போது இருவரும் மனம் கஷ்டப்பட்டு ஒன்று சேர்ந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |