Siragadikka Aasai: ரவியின் முதலாளியை திருமணம் செய்கிறாரா மனோஜ்? அதிர்ச்சியளித்த ப்ரொமோ காட்சி
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை வீட்டிற்கு ரவியின் ஹோட்டல் உரிமையாளர் வீட்டிற்கு வந்துள்ள நிலையில், விஜயா அவரை மனோஜிற்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
ரோகினி விஜயாவிடம் பொய்கூறி மாட்டிக் கொண்ட நிலையில், அவரை சமாதானப்படுத்த முயற்சித்து திருட்டு செயினை வாங்கி வைத்துள்ளார்.
இந்த பிரச்சனை எப்பொழுது பூதாகரமாக வெடிக்கும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சீதா மற்றும் அருண் காதல் பிரச்சனையாக இருக்கும் நிலையில், மனோஜின் மனதை மாற்ற ரோகினி மற்றொரு நாடகத்தை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் அண்ணாமலை வீட்டிற்கு ரவியின் முதலாளி பெண் வந்துள்ள நிலையில், அவரை பிஸ்னஸ் பார்ட்டனராக சேர்த்துள்ளதாக கூறியுள்ளார்.
உடனே விஜயா கிரிமினலாக யோசித்து ரோகினியை கழற்றிவிட்டு நீத்துவை மனோஜிற்கு திருமணம் செய்வதற்கு கனவு கண்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |