சீரியல் செட்டில் மனோஜ் கொடுத்த அலப்பறை- தாங்க முடியாமல் கையெடுத்து கூம்பிட்ட மீனா
சீரியல் செட்டில் சிறகடிக்க ஆசை சீரியல் மனோஜ் கொடுத்த அலப்பறை காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிறகடிக்க ஆசை
பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் "சிறகடிக்க ஆசை”. இந்த சீரியலில் திருப்பங்களுக்கு பஞ்சமே இருக்காது.
சாதாரண குடும்பத்தில் நடக்கும் சுவாரஸ்யமான விடயங்களை எடுத்துக் காட்டும் விதமாக எடுக்கப்படும் இந்த சீரியலில் முத்துவை விட ரோகிணி மிக முக்கியமான கதாபாத்திரம்.
ஏற்கனவே திருமணமாகி தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை மறந்து, தனக்கானவொரு வாழ்க்கை வேண்டும் என்பதற்காக மனோஜை காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
க்ரிஷை வளர்க்க முடியாமல் ரோகிணியின் அம்மா பல வழிகளில் கெஞ்சி போராடி பார்க்கிறார். ஆனாலும் ரோகிணி மனம் இறங்கி உண்மைகளை அவருடைய வீட்டில் கூறுவது போன்று இல்லை.
அலப்பறை செய்யும் மனோஜ்
இந்த நிலையில், இவ்வளவு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ரோகிணியின் இரண்டாவது கணவராக வருபவர் தான் மனோஜ்.
இவர், தன்னுடைய வீட்டில் உள்ள பணத்தையே தன்னுடைய சுயநலத்திற்காக திருடி வீட்டை விட்டு ஓடி விட்டார். அந்த பணத்தை ரோகிணி மீட்டுக் கொடுத்தும், அதனை வீட்டிற்கு கொடுக்காமல் கடை ஆரம்பித்து செய்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கிடையில் சிறகடிக்க ஆசை சீரியல் செட்டில் மனோஜ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறிதேவா அலப்பறை செய்யும் காணொளியை பகிர்ந்துள்ளார்.
இந்த காணொளியை பார்த்த பலரும், “செட்டில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பீர்களா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |