Siragadikka Aasai: மனோஜ் வாங்கிய லட்சக்கணக்கான கடன்... கைகட்டி நின்ற அண்ணாமலை
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக அண்ணாமலை கையெழுத்து போட்டதுடன், மனோஜ் சொத்தை பிரித்து கேட்டது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

ரோகினி வாழ்க்கையில் நடந்த உண்மையை அறிந்த மீனா யாரிடமும் கூறமுடியாமல் தவித்து வருகின்றார். இந்நிலையில் க்ரிஷ் காணாமல் போன நிலையில், அவனை கடத்திய பிஏ-வை போலிசார் பிடித்துள்ளனர்.
தனது கடையை இன்னும் முன்னேற்ற வேண்டும் என்பதற்காக மனோஜ் வெளிநபரிடம் ரூபாய் 30 லட்சம் கடனாக வாங்கியுள்ளார்.
இதனைக் கேட்டு நபர் வீட்டிற்கு வந்த நிலையில், அண்ணாமலையிடம் கையெழுத்து வாங்கிவிட்டு சென்றுள்ளார். அண்ணாலை கை நடுக்கத்துடன் கையெழுத்து போட்டதை பார்த்த முத்து கோபத்தில் பொங்கி எழுந்துள்ளார்.
பின்பு ஒரு கட்டத்தில் மனோஜ் தனக்கான சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளது குடும்பத்தினர் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |