Ethirneechal: கடைசி நிமிடத்தில் கையை விரித்த நபர்! கதிரால் பயங்கர கோபத்தில் ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் ஹோட்டல் திறப்பு விழாவில் கதிர் சதி செய்துள்ள நிலையில், கடைசி நிமிடத்தில் ஜனனி பயங்கர கோபமாக இருக்கின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல் பெண்கள் விரும்பி பார்க்கும் சீரியலாக இருக்கின்றது. பெண்களை அடக்கி அதிகாரம் செய்த குணசேகரன் தற்போது தலைமறைவாகியுள்ளார்.
வீட்டு மருமகள்கள் தாங்கள் நினைத்தது போன்று சமையல் தொழில் செய்யவும் ஆரம்பித்துள்ளனர். அதாவது இவர்களின் தொழிலுக்கு விசாலாட்சியும் முழு ஆதரவு தெரிவித்து தனக்கு தெரிந்த சமையல் ரகசியத்தினையும் கூறுகின்றார்.

இன்னும் சில தினங்கள் மட்டுமே கடை திறப்பு விழாவிற்கு இருக்கும் நிலையில், கதிர் சதி வேலையை ஆரம்பித்துள்ளது நன்றாகவே தெரிகின்றது.
அதாவது இளைஞர் ஒருவரை கடத்தி வைத்துக்கொண்டு அவரது தந்தையிடம் நெருக்கடி கொடுக்கின்றனர். அவர் ஜனனியிடம் சென்று தான் வாக்கு கொடுத்ததை நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார்.
கடைசி நொடியில் இவ்வாறான பதில் கிடைத்ததால் சிறிது மனகஷ்டத்தில் ஜனனி காணப்படுகின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |