Siragadikka Aasai: மருத்துவமனையில் கண்ணீர் விடும் மனோஜ்... ரோகினி கூறிய வார்த்தை
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் விபத்தில் சிக்கி கண்பார்வையை இழந்துள்ள நிலையில், ரோகினி ஆறுதலாக பேசி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு சிறந்த மருமகளாகவும் கதை செல்கின்றது.
முத்து மீனாவின் வளர்ச்சி பிடிக்காமல் மாமியார் பல சதிவேலைகளை செய்து வருகின்றார். அவருடன் மனோஜ் மற்றும் ரோகினியும் சேர்ந்துள்ளனர். தற்போது எதிர்பாராத திருப்பமாக மனோஜ் விபத்தில் சிக்கி கண்பார்வையை இழந்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மனோஜ், ரோகினியிடம் இனி நான் மற்றவர் துணையில்லாமல் இருக்க முடியாது என்று கண்கலங்கியுள்ளார்.
இதற்கு ரோகினி தான் எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டுச் செல்ல மாட்டேன் என்று ஆறுதல் கூறி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
