Siragadikka Aasai: ரோகினி அறையில் க்ரிஷ்... அதிர்ச்சியில் மீனா
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து தனது வீட்டிற்கு க்ரிஷை அழைத்து வந்துள்ள நிலையில், இரவில் ரோகினியின் அறைக்குச் சென்று தூங்குவதற்கு சென்றுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை திட்டித்தீர்த்து வருகின்றார்.
இந்நிலையில் ரோகினியின் அம்மா க்ரிஷை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது விபத்தில் சிக்கி மருத்துவமனையில் இருக்கும் நிலையில், முத்து க்ரிஷை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீனா தனது பக்கத்தில் க்ரிஷை படுக்க வைத்துள்ள நிலையில், க்ரிஷ் யாருக்கும் தெரியாமல் ரோகினி அறைக்குச் சென்று அங்கு தூங்குவதற்கு ரோகினியிடம் கேட்டுள்ளார்.
இதற்கு ரோகினி சம்மதிக்காமல் இருக்கும் நிலையில், மீனாவும் கண்விழித்து பார்க்கையில் க்ரிஷ் காணவில்லை என்பதால் அவனைத் தேடி ரோகினி அறைக்கு வருகின்றார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
