Siragadikka Aasai: சிட்டியுடன் சேர்ந்து மீண்டும் சதி திட்டத்தை ஆரம்பித்த ரோகினி... இந்த தடவையாவது சிக்குவாரா?
சிறகடிக்க ஆசை சீரியலில் விவாகரத்து பெறுவதற்கு வழக்கறிஞரிடம் சென்ற ஸ்ருதியை தடுத்து நிறுத்தி மீனா அழைத்து வந்துள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.
பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது ஸ்ருதி மற்றும் ரவி திருமணமான நாளை கொண்டாட ஏற்பாடுகள் செய்துள்ள நிலையில், ஸ்ருதி ரவியை தவறாக புரிந்து கொண்டு விவாகரத்து கொடுப்பதற்கு வழக்கறிஞரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்பொழுது மீனா, முத்து இருவரும் ஸ்ருதியை தடுத்து நிறுத்தி அழைத்து வந்துள்ளனர். கொண்டாட்டம் முடிந்த பின்பு ரோகினி தனது வில்லத்தனத்தினை ஆரம்பித்துள்ளார்.
சிட்டியை நேரில் சந்தித்து போன் விடயத்தை கூறியுள்ள நிலையில், சிட்டி அடுத்து சத்யாவை பழிவாங்க வாய்ப்பு தேடி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |