Siragadikka Aasai: வீடு திரும்பிய அண்ணாமலை... கண்ணீருடன் கட்டிப்பிடித்த விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை வீட்டைவிட்டு சென்ற நிலையில், தற்போது மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளதையடுத்து விஜயா கண்ணீருடன் கட்டிப்பிடித்து அன்பை வெளிக்காட்டியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து அண்ணாமலையிடம் ஜாமீன் கையெழுத்து வாங்கி சென்றனர்.
மேலும் சரியாக பணத்தை திருப்பி செலுத்தவில்லையெனில் குடும்பத்தினரை வைத்து மிரட்டினார். இதனால் கோபத்தில் ஆழ்ந்த முத்து மனோஜை அடித்தார்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய சொத்தை பிரித்து தருமாறு கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்ட நிலையில், அண்ணாமலை மனமுடைந்து வீட்டைவிட்டு வெளியேறினார்.
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில் அண்ணாமலை வீடு திரும்பியுள்ளார். மேலும் அவர் கடன் கொடுத்தவர்களிடம் சென்று தனது குடும்ப நபர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் பணத்தையும் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து அண்ணாமலை கையெழுத்திட்ட பேப்பரைக் கிழித்து போட்டுவிட்டு, மனோஜ் மற்றும் ரோகினியை பணத்திற்கு பொறுப்பேற்று கையெழுத்து போடக் கூறியுள்ளார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |