Neeya Naana: திருமண பத்திரிக்கையில் புதுமை எதற்கு? ஒற்றை வார்த்தையால் கோபிநாத்தை வியக்க வைத்த பெண்
நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் விதவிதமாக புதுமையாக பத்திரிக்கை அடித்தவர்கள் மற்றும் மரபான பத்திரிக்கைகள் தான் சரி என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற உள்ளது.
நீயா நானா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நீயா நானா நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு தலைப்பைக் கொண்டு விவாதிக்கப்படும். இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்த வாரம் விதவிதமாக புதுமையாக பத்திரிக்கை அடித்தவர்கள் மற்றும் மரபான பத்திரிக்கைகள் தான் சரி என சொல்பவர்கள் என்ற தலைப்பில் விவாதிக்கப்படுகின்றது.

இன்றைய காலத்தில் மாடர்ன் என்று பலரும் புதுமையான பழக்கத்தை கடைபிடிப்பதுடன், அதனை செயல்முறைப்படுத்தவும் செய்கின்றது.
இதனால் பழைய மரபுகள் மறைந்துவிடும் நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் இந்த வார நீயா நானா விவாதத்தில் திருமண பத்திரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இதில் பழைய மரபுகளை மறந்து புதுமையான வழக்கத்தில் பத்திரிக்கை அடிப்பவர்கள் தங்களது பக்கத்தில் உள்ள நியாயத்தினை விளக்குகின்றனர்.
ஆனால் பழைய மரபு பத்திரிக்கையை விரும்புகிறவர்கள், சொந்தங்களை மறந்துவிடுகின்றனர் என்று வேதனை படுகின்றனர். அதில் பெண் ஒருவர் வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் வைத்து திருமண அழைப்பினை அழைத்த காலம் உள்ளது என்று கூறி கோபிநாத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |