தனக்கு தானே படையல் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை- பார்த்து பதறிப்போன நெட்டிசன்கள்
தனக்கு தானே படையல் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் பதிவு இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.
இந்த சீரியலில் கோமதி பிரியா நாயகியாகவும், வெற்றி வசந்த் நாயகராகவும் நடித்து வருகிறார்கள்.
மூன்று மகன்களும், மூன்று மருமகள்களும் ஒரே குடும்பமாக வாழும் பிரச்சினைகளை கருவாக வைத்து சீரியல் நகர்த்தப்படுகிறது.
சீரியலில், மனோஜுற்கு பிடித்த அம்மாவாகவும், முத்துவை வெறுக்கும் அம்மாவும் கலக்கிக் கொண்டிருப்பவர் தான் விஜயா. பணத்தை மாத்திரம் மதித்து மீனாவை துன்புறுத்தி வருகிறார்.
படையல் புகைப்படம்
இந்த நிலையில், மீனாவின் தங்கைக்கு அவர் ஆசைப்படும் அருணை திருமணம் செய்து வைக்கக்கூடாது முத்து பிடிவாதமாக இருக்கிறார். ஆனால் சீதா ஆசைப்படுவதை எப்படியாவது செய்து வைத்து விட வேண்டும் என்ற முடிவில் மீனா இருக்கிறார்.
இப்படி சீரியல் ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஜயா தனக்கு தானே படையல் போடுவது போன்ற புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த சீரியல் ரசிகர்கள், சீரியலில் விஜயா இறக்கப்போகிறாரா?” என அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். உண்மையில் இது எந்த சீரியல் படப்பிடிப்பு தளம் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |

