சிங்கிள் பசங்க: மனம் விரும்புதே Round இல் எல்லை மீறிய போட்டியாளர்கள்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற மனம் விரும்புதே Round இல் போட்டியாளர்கள் தங்கள் துணையை சர்ப்ரைஸ் செய்வதற்காக நிஜ காதலர்களாகவே மாறிய காட்சிகள் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் படு வைரலாகி வருவதுடன் ஏகப்பட்ட விமர்ச்சனங்களையும் குவித்து வருகின்றது.
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது.

மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் இடம்பெற்ற மனம் விரும்புதே Round இல் போட்டியாளர்கள் தங்களின் சக போட்டியாளர்களை கவரும் வகையில் செய்த சில எல்லை மீரிய செயல்கள் அடங்கிய காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
குறித்த காணொளிகளை விமர்ச்சிக்கும் வகையில் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |