பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்த மறுனால் இன்ஸ்டா கொடுத்த அதிர்ச்சி...ஷாக்கான ரசிகர்கள்
பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அவரது இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
சின்மயி, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத, ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்தவர்.
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெறும் ஒரு தெய்வம் தந்த பூவே என்கிற பாடல் மூலம் அறிமுகமானவர் சின்மயி.
இதையடுத்து ஏஆர் ரகுமான் உள்ளிட்ட பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய சின்மயி, மிக குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்தவர்.
இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு அவருக்கு கடந்த இரு தினங்களுக்கு முதல் இரட்டை ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பிறகு அவரது இன்ஸ்டா கணக்கு முடக்கப்பட்டு இருக்கிறது.
அவர் பல ஆண்கள் தனக்கு இன்ஸ்டா DMல் தகாத புகைப்படங்களை அனுப்புகிறார்கள் என புகார் கூறி இருந்தார்.
இந்த நிலையில் அவரின் இன்ஸ்டா கணக்கை நீக்கிவிட்டாதாக பேக்கப் இன்ஸ்டா ஐடியில் இருந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.