Singappenne: ஆனந்திக்கு தெரியாமல் தாலி கட்டும் அன்பு.. அடுத்தடுத்த திருப்பங்கள்
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு திருமணத்திற்கு தயாராகியுள்ள நிலையில், திருமணத்தை நிறுத்துவதற்காக அவரது மாமா பெண் அன்புவின் தங்கையை அறைக்குள் அடைத்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்ணே சீரியல் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், தற்போது அன்பு ஆனந்தியின் திருமண ஏற்பாடு பரபரப்பாக செல்கின்றது.
நண்பர்களின் திருமணத்தில் அன்பு மற்றும் ஆனந்திக்கு திருமணம் செய்து வைப்பதற்கு மகேஷ் ஏற்பாடு செய்துள்ளார்.
மற்றொரு புறம் அன்புவை திருமணம் செய்வதற்கு அவரது மாமா பெண் பல தந்திரங்களை செய்து காய்நகர்த்தி வருகின்றார். அதாவது திருமண நிச்சயதார்த்தத்தின் போதே திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனை அன்புவின் தங்கை தெரிந்து கொள்ளவே அவர் சண்டை போடுகின்றார். ஆனால் அவரை அறைக்குள் தள்ளி பூட்டி வைத்துள்ள நிலையில், அன்புவின் திருமணம் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |