Singappenne: அன்பு அனந்தியிடம் உண்மையை கக்கிய ரகு... பரபரப்பான ப்ரோமோ காட்சி
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தியிடம் ரகு சிக்கிக் கொண்ட நிலையில், அன்புவிடம் இதற்கு காரணம் யார் என்பதையும் உளறியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவருகின்றது. அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியைக் காதலித்து வந்தனர்.
பின்பு அன்புவும் ஆனந்தியும் காதலிப்பதை அறிந்த மகேஷ் ஒதுங்கி போயுள்ளார். இந்நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்தது.
ஆனால் தனது கர்ப்பத்திற்கு காரணமானவனை கொண்டு வந்து நிறுத்துவதாக ஆனந்தி சவால் விட்டு கிராமத்தை விட்டு கிளம்பினார்.
தற்போது சென்னை கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு ஆனந்தியின் கர்ப்பம் தெரியாமல் இருந்த நிலையில், சௌசௌ சட்டென உளறியுள்ளார்.
ஆனால் இந்த விடயத்தினை மகேஷிற்கு கூறாமல் அனைவரும் மறைத்துள்ளனர். இந்நிலையில் ரகு ஆனந்தி அன்புவிடம் சிக்கிக் கொண்ட நிலையில், காரணம் யார் என்பதையும் உளறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |