Singappenne: மகேஷால் பாழாகிப்போன துளசியின் திட்டம் - விழி பிதுங்கி நிற்கும் அன்பு அம்மா
சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷ் கோபத்தில் அன்புவிடம் கூறிய வார்த்தைகளுக்கு அவரது அம்மா விழி பிதிங்கிய நிலையில் செய்வதறியாது நிற்கிறார்.
சிங்கப்பெண்ணே
தற்போது இல்லதரிகளிடையே பரபரப்பாக ஓடிக்கொணடிருக்கும் சீரியல்களில் சிங்கப்பெண்ணே சீரியல் தான் முதலிடத்தில் உள்ளது. ஆனந்தியை அன்பு மற்றும் மகேஷ் என்ற இருவர் காதலித்து வந்தனர்.
அதில் ஆனந்தி அன்புவை தான் காதலிக்கிறார் என தெரிந்ததும் மகேஷ் ஆனந்தியை விட்டு ஒதுங்கி போயியுள்ளார். இந்த நிலையில் ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
அதாவது திருமணம் ஆகாமல் கர்ப்பமாக இருக்கிறார். அவர் இப்படி கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிய வந்துவிட்டது. மகேஷ்க்கு மட்டும் தான் தெரியாமல் இருந்த உண்மை தற்போது அவருக்கும் தெரியவந்துள்ளது.
மகேஷ்க்கு தெரிய வந்த உண்மை
தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விடயம் மகேஷ்க்கு எப்படியோ தெரிய வருகின்றது. இதனை அறிந்த மகேஷ் மித்ராவை அடித்து விட்டு அன்புவின் வீட்டிற்கு சென்று அன்புவை சரமாரியாக அடித்து தள்ளுகிறார்.
அன்புவிடம் என்ன நடந்ததென்று கூட கேட்காமல் அவரை அடித்து தள்ளுகிறார் மகேஷ். இதனை பார்த்த துளசி பீதியில் இருக்கிறார். அன்புவின் அம்மா விழி பிதுங்கிய நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.
இதில் மகேஷ் அன்புதான் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் என தவறாக புரிந்து கொண்டு ஆனந்தியை ஏமாற்றிவிட்டு துளசியை திருமணம் செய்து கொண்டால் உன்னை சும்மா விட மாட்டேன் என மகேஷ் அன்புவிடம் கூறுகிறார்.
இதை கேட்ட துளசிக்கு தூக்கி வாரி போடுகிறது. தற்போது அன்புவை திருமணம் திருமணம் செய்து கொள்ள துளசி போட்ட திட்டம் அனைத்தும் பாழாகி விட்டது எனறு தான் கூற வேண்டும்.

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
