Singappenne: உயிருக்கு ஆபத்தான நிலையில் மகேஷ்... சதியிலிருந்து உயிர் தப்பிப்பாரா?
சிங்கப்பெண்ணே சீரியலில் மகேஷை கொலை செய்வதற்கு சதிதிட்டம் தீட்டியுள்ள நிலையில், அன்பு அவரது உயிரைக் காப்பாற்றுவதற்கு வந்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
இந்நிலையில் அன்பு ஆனந்தி திருமணம் நடந்து முடிந்த நிலையில், அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளாததால் ஆனந்தியின் அக்கா கணவருடன் அன்பு தங்கியுள்ளார்.

ஆனாலும் அன்புவை ஆனந்தி ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்றார். தற்போது மகேஷின் உயிரைப் பறிக்க திட்டம் தீட்டியுள்ள நிலையில் இதனை அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் காப்பாற்ற ஓடி வருகின்றனர்.
மகேஷ் உயிர் பிழைப்பாரா என்ற கேள்வி எழுகின்றது... ஏனெனில் காருக்குள் வைத்திருக்கும் வாசனை திரவியத்தில் விஷமருந்தைக் கலந்துள்ளனர்.
ஆனந்தியின் கர்ப்பத்திற்கான காரணம் மித்ராவின் நகை மூலமாக அம்பலமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |