Singappenne: ஆனந்தியை சித்ரவதை செய்யும் கருணாகரன்... கருவைக் காப்பாற்ற போராடும் அன்பு
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை கருணாகரன் பழிவாங்கும் விதமாக வேலையை வாங்கும் நிலையில், அன்பு அவருக்கு உதவியாக இருக்கின்றார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்கின்றார் ஆனந்தி.
ஆனந்தி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், இதற்கு காரணம் யார் என்று தெரியாமல், அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஆனந்தியின் கர்ப்பத்தை அறிந்த அன்பு அவரை பத்திரமாக பார்த்து வருகின்றார். ஆனால் மகேஷிற்கு இந்த விடயம் தெரியாமல் அன்பு ஆனந்தி இருவரும் மறைத்து வருகின்றனர்.
தற்போது கருணாகரன் ஆனந்தியின் நிலை அறிந்தும் அவரை எடை தூக்க வைத்து சித்ரவதை செய்கின்றார். கருணாகரன் சித்ரவதைக்கு மத்தியில் ஆனந்திக்கு அன்பு பக்கபலமாக நின்று உதவி செய்கின்றார்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |