Singappenne: உண்மையை நெருங்கும் ஆனந்தி, அன்பு... பின்தொடரும் மித்ரா! சிங்கப்பெண்ணே அப்டேட்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு ஆனந்தி உண்மையை கண்டுபிடிக்க ரகுவிடம் நெருங்குகின்றனர்.
சிங்கப்பெண்ணே
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரபல ரிவியில் ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்கின்றார் ஆனந்தி.
ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ், மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்திரத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.
அன்பும், மகேஷும் ஆனந்தியை காதலித்து வந்த நிலையில், அன்புவை தான் ஆனந்தி காதலிக்கின்றார் என்று தெரிந்ததும், மகேஷ் விலகியுள்ளார்.
ஆனால் எதிர்பாராத விதமாக ஆனந்திக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது கர்ப்பமாக இருக்கின்றார். இதனால் அன்புவிடமிருந்தும் நிரந்தரமாக விலக ஆரம்பித்தார்.
ஆனால் அக்கா கோகிலாவின் திருமணத்தின் போது ஆனந்தியின் கர்ப்ப விடயம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும், அன்புவிற்கும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் ஆனந்தியுடன் சேர்ந்து உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு அன்புவும் களமிறங்கியுள்ளார். தற்போது ஆனந்தி கார்மென்ட்ஸில் வேலை செய்த ரகுவை பிடிப்பதற்கு அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
