Singappenne: ஆனந்தி இருக்கும் இடத்திற்கு வந்த ரகு... அன்புவிடம் காதலை வெளிப்படுத்தும் தருணம்
சிங்கப்பெண்ணே சீரியலில் சுற்றுலா சென்ற இடத்தில் அன்புவை ஆனந்தி நன்றாக கவனத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரகு மற்றும் கருணாகரன் இருவரும் அதே இடத்திற்கு வந்துள்ளனர்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாட்டால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர்.

தேனிலவு சென்ற இடத்தில் ஆனந்தியைக் கொலை செய்வதற்கு அடுத்தடுத்து துளசி முயற்சித்து வரும் நிலையில், தற்போது அருவி ஒன்றிற்கு வந்துள்ளனர்.
அங்கு அன்புவை ஆனந்தி கவனித்துக் கொள்ளும் விதம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. மேலும் இதே இடத்திற்கு கருணாகரன் மற்றும் ரகு இருவரும் வந்துள்ளனர்.
மேலும் இத்தருணத்தில் தான் ஆனந்தியை துளசி மலையிலிருந்து தள்ளிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |