Singappenne: கதறி அழுதப்படி ஓடிய ஆனந்தி.. திணறும் அன்பு குடும்பத்தினர்- பிணவறையில் இருப்பது யார்?
தைரியமாக பிணவறைக்குள் சென்று உள்ளே யார் இருக்கிறார் என்பதை காண சென்ற ஆனந்தி கதறியழுதப்படி வெளியில் ஓடி வருகிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.
பிணவறையில் இருப்பது யார்?
இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவை அன்பு கடுமையாக திட்டி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன அவருடைய அம்மா வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார்.
அன்பு அம்மா சென்றால் அந்த வாய்ப்பை பயன்படுத்தி அன்புவின் மாமன் மகள், தங்கை தூண்டி விட்டு ஆனந்தியை எப்படியாவது சிறைக்கு அனுப்ப வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறார்.
தைரியமாக பிணவறைக்குள் சென்ற ஆனந்தி 502 இலக்கத்தில் உள்ள பிணத்தை பார்த்த பின்னர் கதறியழுதப்படி வெளியில் ஓடி வருகிறார்.
வெளியில் உள்ளவர்கள் பயத்துடன் யார் என கேட்க, அழுது கொண்டிருந்த ஆனந்தி அன்புவை உள்ளே போக விடாமல் தடுக்கிறார். இதனால் அன்பு குடும்பத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது. பிணவறையில் பார்த்தது அன்புவின் அம்மாவா அல்லது வேறு யாருமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |