சிம்புவிற்கு உதவி செய்த உதயநிதியுடன் மோதிய டி.ஆர்... மீண்டும் முடியாத மாநாடு பிரச்சினை
சிம்பு நடித்த திரைப்படம் பல பிரச்சினைகளுக்கு பின்பு இன்று வெற்றிகரமாக வெளியான நிலையில், இதற்கு உதவி செய்த உதயநிதி ஸ்டாலினிடம் சிம்புவின் தந்தை மோதியுள்ளது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவான படம் தான் மாநாடு.
நேற்றைய தினம் திடீரென ஏற்பட்ட சிக்கலால் குறித்த படத்தினை இன்று வெளியிடமுடிவில்லை என்று தயாரிப்பாளர் கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
ஆனால் உதயநிதி ஸ்டாலின் செய்த உதவியினால் இன்று வெற்றிகரமாக திரையரங்கில் ஒளிபரப்பாகி பயங்கர வெற்றியை பெற்றுள்ளது.
முதலில் மாநாடு படத்தை ஒடிடி தளங்களுக்கு விற்றால் மிக அதிக லாபம் கிடைக்கும் என்று பலரும் பல வாய்ப்புகளை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு கொடுத்துள்ளனர்.
ஆனால் சிம்புவிற்கு மார்கெட் நன்றாக இருப்பதால் திரையரங்கில் வெளியிடுவதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு படத்துக்கும் டிவி சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமம் என்பது முக்கியமான வியாபார அம்சம்.
முதலில் மாநாடு திரைப்படத்தினை விஜய் டிவி விலை பேசிய நிலையில், தயாரிப்பாளர் கூறிய விலை அதிகமாக இருந்ததால் பின்வாங்கியுள்ளது.
இதனால் திரையரங்கில் வெளியான பின்பு சாட்டிலைட் உரிமத்தை விற்கலாம் என்றும் படம் ஹிட் ஆகிவிட்டால் நாம் கூறும் விலையினை தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார் தயாரிப்பாளர்.
ஆனால் படத்திற்கு பைனான்ஸ் செய்தவர்கள் தரப்பிலிருந்து, அனுமதி அளித்தால் மட்டுமே திரையரங்கில் வெளியிடுவதற்கான கெ.டி.எம் எனப்படும் தியேட்டர் ஒளிபரப்பு பாஸ்வேர்டை பெறமுடியும்.
இந்நிலையில் பைனான்ஸ் தரப்பிலிருந்து கடன் கொடுக்கப்பட்ட தொகைக்கு நெருக்கடி கொடுத்ததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அப்போது தான் உதயநிதி இவர்களின் பணத்தேவையினை அறிந்து குறித்த படத்திற்கு கலைஞர் டிவி சார்பில் 6 கோடி ரூபாய் விலை பேசப்பட்டும், மீதம் 3 கோடி சிம்புவின் தாய் கொடுப்பதாகவும் கூறிய பின்பே படம் வெளியிடுவதற்கு முடிந்ததாம்.
ஆனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த விலையினை விட குறைவு என்பதால், கடைசி நேர நெருக்கடி காரணமாக வேறு வழியில்லாமல் படத்தை ரீலீஸ் செய்ய பணம் தேவை என்பதால் கலைஞர் ரிவிக்கு கொடுக்க சம்மதித்துள்ளாராம்.
ஆனால் தற்போது சிம்புவின் தந்தை தான் அந்த பணத்தினை கொடுத்துவிட்டு சாட்டிலைட் உரிமைய தான் பெற்றுக்கொள்வதாகவும், உதயநிதியிடம் வாங்கிய பணத்தினை கொடுத்துவிடும்படியும், சாட்டிலைட் உரிமையை நான் விற்றுக் கொள்கிறேன் என்றும் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.