ஒரே முகக்கவசத்தை துவைக்காமல் பயன்படுத்துபவரா நீங்கள்? இந்த பாதிப்பு ஏற்படும் ஜாக்கிரதை
நாம் பயன்படுத்தும் முகக்கவசத்தினை துவைக்காமல் பயன்படுத்துவதால் தோல் ஒவ்வாமைகள் ஏற்படும் அபாயம் ஏற்படுகின்றது.
உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பல தடுப்பு மருந்துகளுக்கு கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படும் நிலையில் முகக் கவசம் அவசியம் அணியுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.
தற்போது மூன்றாவது அலை காரணமாக பல நாடுகள் பீதியில் ஆழ்ந்துள்ள நிலையில், பல நாடுகளில் தாக்கமும் அதிகமாகவே இருக்கின்றது.
கட்டாய முகக்கவசம் என்பது நடைமுறையில், இருப்பதால் பலர் தங்கள் முகக்கவசங்களை சரியான முறையில் பயன்படுத்துகின்றனர். ஆனால், ஒரு சிலர் மூக்கிற்கு கீழே பேருக்கு முகக்கவசம் அணிகின்றனர்.
இன்னும், சிலர் முகக்கவசங்களை துவைக்காமல் அடிக்கடி அணிவதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகிறது.
முகக்கவசம் நமக்கு எந்த அளவுக்கு பாதுகாப்பளிக்கிறது. எந்த முகக்கவசத்தை நாம் பயன்படுத்த வேண்டும்? துவைக்காமல் அடிக்கடி அணிவதால், எது மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் எனபதை காணலாம்.
தோல் பிரச்சனை:
நீண்ட நேரத்திற்கு ஒரே முகக்கவசங்களை அணிந்தால் தோல் ஒவ்வாமைகளை ஏற்படுவதுடன், சரும அரிப்பு போன்ற பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தோல் முகப்பரு:
மிகவும் பொதுவான தோல் நிலைகளில் ஒன்று "மாஸ்க்னே". அதாவது இது சிவத்தல் மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும் ஒரு தோல் முகப்பரு ஆகும். முகக்கவசம் அணிவதால் அந்த குறிப்பிட்ட பகுதியில் சருமம் அதிக வியர்வையை வெளிப்படுத்தும், அவை சரும துளைகளை அடைத்து முகப்பருவுக்கு வழிவகுக்கிறது.
நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம்:
ஒரே முகக்கவசத்தை அடிக்கடி நீண்ட நேரம் உபயோகிப்பது உங்கள் தொற்றுநோயை அதிகரிக்க வழிவகுக்கும். ஏனெனில், வைரஸ் உங்கள் முகக்கவசத்தில் ஒட்டிக்கொள்ளலாம்.
கருப்பு பூஞ்சை ஏற்படும் அபாயம்:
சுகாதாரமற்ற முகக்கவசங்கள் மியூகோர்மைகோசிஸ் (கருப்பு பூஞ்சை) நோய்த்தொற்றுக்கு பங்களிக்கும் என நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இருப்பினும், இது இன்னும் நிரூபணமாகவில்லை. மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.