அடிக்கடி முகத்தில் ஐஸ் கட்டியை தேய்கிறீங்களா? சருமத்தில் இந்த மாற்றம் ஏற்படும்
அடிக்கடி முகத்தில் ஐஸ்கட்டியை தேய்ப்பதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக முகத்தில் ஐஸ்கட்டி தடவுவது இளம்பெண்களிடம் ஒரு வழக்கமாக இருக்கின்றது. இது சரும பராமரிப்புக்கு உதவி செய்கின்றது். முகத்தில் வீக்கம், முகப்பருவை குறைக்க உதவுவதுடன், சருமம் பளபளப்பாகவும் இருக்கும்.
ஆனால் அதிக நேரம் முகத்தில் ஐஸ்கட்டியை பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மைக்கு பதிலாக, தீங்கு தான் விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முகத்தில் ஐஸ்கட்டி பயன்படுத்தினால் விளைவு
நீண்ட நேரம் முகத்தில் நேரடியாக ஐஸ் கட்டியை பயன்படுத்தினால் சருமம் எரிச்சலடைவதுடன், சிவந்து போகவும், கொப்புளமாகவு இருக்குமாம். மேலும் சருமம் மருத்துப் போகவும் செய்யும்.
மேலும் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதம் இழக்கப்படுவதுடன், இதன் விளைவாக சருமம் வறண்டதாக மாறிவிடும். உங்களது சருமம் உணர்திறன் கொண்டதாக இருந்தால் நேரடியாக ஐஸ் கட்டியை முகத்திற்கு பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஐஸ் கட்டி முகத்திற்கு அடிக்கடி பயன்படுத்தினால் சருமத்தை சேதப்படுத்துவதுடன், குளிர்ச்சியான கன்னம் மற்றும் மூக்குகளில் உள்ள மென்மையான அடுக்குகளை சேதப்படுத்து சிவப்பு புள்ளிகளை ஏற்படுத்தும்.
சருமத்தில் வியர்வை, தூசி அல்லது மேக்கப் இருந்தால் ஐஸ் தடவினால் அது சருமத்தின் துளைகளை அடைத்து வெடிப்புகளை ஏற்படுத்தும்.
எவ்வாறு பயன்படுத்தலாம்?
ஐஸ்கட்டியை முகத்தில் நேராக பயன்படுத்தாமல், துணி ஒன்றில் வைத்து முகத்தில் தடவவும்.
ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மேல் ஒருபோதும் ஐஸ்கட்டியை முகத்தில் தேய்க்க வேண்டாம்.
முக்கியமாக முகத்தை நன்கு கழுவி காய்ந்த பிறகு தான் ஐஸ் கட்டியை தடவ வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |