முடி உதிர்வு பிரச்சனையா? சித்த மருத்துவத் தீர்வுகள் இதோ
தலைமுடி உதிர்வு பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் சித்த மருத்துவ குறிப்பினை இங்கு தெரிந்து கொள்வோம்.
தலைமுடி
இன்றைய காலத்தில் பெரும்பாலும் இளம்வயதினருக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகமாகவே இருக்கின்றது.
இவ்வாறு தலைமுடி உதிர்வினால் அந்த பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இதற்காக பல வகையான பொருட்களை வாங்கி தலைக்கு பயன்படுத்துவார்கள்.
இது 'அலோபேசியா ஏரியேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்று அழைக்கப்படும்.
சித்த வைத்தியம்
சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் போன்ற மருந்துகளைச் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்து வர முடி நன்றாக வளரும்.
'டீனியா கப்பைடிஸ்' (Tinea Capitis) என்னும் பூஞ்சையால் சிலருக்குத் தலைமுடி உதிரும். இதற்கான சித்த மருத்துவம் என்னவெனில் சீமை அகத்தி இலைச் சாற்றைத் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசி வர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.
பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்து விழும் ஒரு பொதுவான நிலையாகும். இதற்கு கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |