Siragadikka Aasai: விபத்தில் சிக்கிய ரோகினியின் அம்மா... ஓடிச் சென்று முத்து செய்த காரியம்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் அம்மா விபத்தில் சிக்கிய நிலையில் அவரை முத்து மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
ரோகினியின் உண்மை கொஞ்சம் கொஞ்சமாக வீட்டிற்கு தெரியவந்த நிலையில், விஜயா அவரை திட்டித்தீர்த்து வருகின்றார்.
இந்நிலையில் ரோகினியின் அம்மா க்ரிஷை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் போது விபத்தில் சிக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் யாரும் உதவி செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
அவ்வழியாக வந்த முத்து க்ரிஷின் பாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றார். இந்த சம்பவத்தின் மூலம் ரோகினியின் உண்மை மீண்டும் அம்பலமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |