கருப்பு நிறத்தில் ஆடை அணிந்தால் சாபமா? அதுவும் இந்த நாளில் அணியவே கூடாதாம்!
பொதுவாகவே நிறம் குறித்து பலருக்கு பல விருப்பங்களும் பல அபிப்பிராயங்களும் இருக்கும்.
அதிலும் ஒரு சிலர் எதை எடுத்தாலும் அந்த நிறம் தான் எனக்குப் பிடிக்கும், அதே நிறத்தில் தான் எனக்கு ஆடை வேண்டும் என தலையில் இருந்து கால் வரைக்கும் பிடித்தமான நிறத்தில் ஆடைகளையும் அணிகலன்களையும் அணிந்துக் கொள்வார்கள்.
அதே போல ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அப்படி என்ன இருக்கிறது இந்த நிறத்தில் என்றுக் கேட்டால் இது எனக்குப் பிடித்த நிறம் என்றுதான் எல்லோரும் சொல்வார்கள்.
கருப்பு நிறத்தை துக்க நிறம், துரதிர்ஷ்ட நிறம் என எல்லோரும் சொன்னாலும் பலருக்கும் இந்த கருப்பு நிறம் தான் பிடிக்கும். அப்படி பிடித்து அணியும் இந்த ஆடையை ஒரு சில நாட்களில் அணிந்தால் சாபம் என்றும் சொல்லப்படுகிறது.
கறுப்பு நிறத்தை அணியக் கூடாத நாள்
வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையன்று கறுப்பு நிற உடையை அணியக் கூடாதாம். ஏனெனில் திங்கட்கிழமை சிவபெருமானை போற்றக் கூடிய நாளாகும். மேலும் சிவபெருமான் இந்து மதத்தின் படி மிகப் பெரிய கடவுளாகவும் மரணத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். இந்நாளில் கறுப்பு நிறத்தில் உடை அணிந்தால் அது மரணத்துடனும் இருளுடனும் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. இதனால் திங்கட் கிழமை கருப்பு நிறத்தில் ஆடை அணியாமல் சிவபெருமானை குளிர வைக்க பால் மற்றும் தேன் கொண்டு சிவனுக்கு பூஜை செய்தால் நன்மை விளையுமாம்.
அதே போல செவ்வாய்க்கிழமைகளிலும் கருப்பு நிறத்தில் ஆடைகளை அணியக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் நவக்கிரங்களில் செவ்வாயும் சனியும் எதிரி கிரகங்கள் அதுமட்டுமல்லாமல் கருப்பு நிறமானது சனியின் நிறம் என்பதால் செவ்வாய்கிழமை கருப்பு அணிவது அசுபமாக பார்க்கப்படுகிறது. மேலும், செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஹனுமானுக்கு உகந்த நாள் எனவும் இந்த தினங்களில் ஹனுமானின் ஆசியைப் பெற கோயில் செல்லும் போது சிவப்பு நிற ஆடைகளை அணிந்து செல்லவேண்டுமாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |