பெண்களை ஏமாற்றி ஆபாச படம்: கணவர் குறித்த ஷில்பா ஷெட்டி வெளியிட்ட உண்மை
ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய தனது கணவர் கைதான நிலையில், தற்போது எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் பொதுவாக கருத்தினை பகிர்ந்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி.
கடந்த 19ம் தேதி மும்பை காவல்துறையினரால், ஆபாச வீடியோக்களை தயாரித்து வெளியிட்ட விவகாரத்தில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழிலதிபர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார்.
தனது கணவர் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஷில்பா ஷெட்டி நேற்றிரவு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், ஒரு புத்தகத்தின் வரிகளை புகைப்படமாக எடுத்து அதனை மேற்கோளாக காட்டி பதிவிட்டுள்ளார்.
அவரது கருத்து, ஜேம்ஸ் தர்பரின் மேற்கோளை எடுத்துக்காட்டுகிறது. இந்த பதிவில் ஷில்பா ஷெட்டி, தனது சொந்த கருத்தை எதுவும் தெரிவிக்கவில்லை. அந்த புத்தகத்தில், ‘எங்களைத் துன்புறுத்தியவர்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள், அனுபவித்த துரதிர்ஷ்டங்கள் ஆகியவற்றை கோபத்துடன் திரும்பிப் பார்க்க வேண்டாம்.
இதனால் ஏதாவது நோய் ஏற்படலாம் அல்லது மரணத்தை கூட அனுபவிக்கலாம். நாம் இருக்க வேண்டிய இடம் இங்கே இருக்கிறது. என்ன நடந்தது அல்லது என்ன நடக்கிறது என்பது பற்றி அறிய ஆர்வம் இல்லை. ஆனால் என்னவென்பது முழுமையாக அறியமுடிகிறது. நான் உயிருடன் இருப்பதால், அதிர்ஷ்டசாலி என்பதை உணர்கிறேன்.
இதையறிந்து ஆழ்ந்து மூச்சு விடுகிறேன். கடந்த காலங்களில் நான் சவால்களை எதிர்கொண்டேன். எதிர்காலத்திலும் சவால்களை எதிர்கொள்வேன்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தகத்தின் இந்த பகுதியைப் பகிர்ந்துள்ள ஷில்பா, தனது சொந்த கருத்தாக எதுவும் எழுதவில்லை என்றாலும், அவர் தற்போதைய சூழ்நிலைகளில் தன்னை எவ்வாறு கையாளுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
ஆபாச படதயாரிப்பில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். கணவர் ராஜ் குந்த்ரா அப்பாவி என்றும் விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.