தேவதாசியாக நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை! பிரத்யேக பேட்டி
கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகைகளில் ஒருவர் ஷீலா ராஜ்குமார்.
2012ம் ஆண்டு திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த ஷீலா, பரதநாட்டியக் கலைஞரும் கூட.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் கல்வி முழுந்ததும் கூத்துப்பட்டறையில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
தொடர்ந்து சமூக அக்கறையுள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளிவந்த டூலெட் படம் நற்பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனக்கு வரலாறு தொடர்பான கதைகளில் நடிக்க ஆசை எனவும், தேவதாசியாக நடிக்க ஆசை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சினிமாவில் நுழைந்த போது பெற்றோர் சம்மதம் தெரிவிக்காத சூழலில், தற்போது அவர்களே புரிந்துகொண்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவர் கூறிய இன்னும் பல சுவாரசிய தகவல்கள்,