நரைமுடியை கருப்பாக மாற்ற... ஷாம்பூவில் இந்த 2 பொருள் கலந்து குளிங்க
நரைமுடி வந்துவிட்டது என்றால் அதற்கு விலைகொடுத்து இரசாயன பொருட்கள் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதற்கு ஷாம்பூவில் சில பொருட்கள் கலந்து போட்டால் போதும்.

நரைமுடி கருப்பாக மாற
தற்போது வயது வித்தியாசமின்றி எல்லோருக்கும் நரைமுடி பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இதை மாற்றுவதற்கு நாம் விலைகொடுத்து இரசாயன பொருட்கள் வாங்கி நரைமுடியை கருப்பாக்க வேண்டிய தேவை இல்லை.
தற்போது நாம் எல்லோரும் தலையை எளிதில் சுத்தம் செய்யக்கூடிய ஷாம்பூவை தான் பயன்படுத்துகிறோம். பொதுவாக ஷாம்பூ தலைமுடிக்கு ஆரோக்கியமில்லை என்று சொல்வதை கேட்டிருப்போம்.

அவை உண்மை தான் இருப்பினும், அதே ஷாம்பூவில் சில பொருட்களைக் கலந்தால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அப்படி தான் நரை முடி உள்ளவர்கள் சில பொருட்களை கலந்து பூசினால் அவர்களுக்கு நரைமுடி கருப்பாகும்.
இந்த பதிவில் தினமும் பயன்படுத்தும் ஷாம்பூவில் எதை கலந்தால் நரைமுடி கருப்பாக மாறும் என்பதை பார்க்கலாம். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கலாம்.

என்ன செய்ய வேண்டும்?
ஒரு பாத்திரத்தில் ஷாம்பூவைப் போட்டு, அதனுடன் இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் தேவையான அளவு அரிசி நீரைச் சேர்த்துக் கலக்கவும். இதைக் கொண்டு உங்கள் தலைமுடியைக் கழுவினால், சில நாட்களில் நரை முடி இயற்கையாகவே கருமையாகிவிடும்.
நரை முடியை விரைவாகக் கருமையாக்க விரும்பினால், ஒரு கிண்ணத்தில் ஷாம்பூவைப் போட்டு, அதனுடன் இன்ஸ்டன்ட் காபி தூள், கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாகக் கலந்து, உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

காபித்தூள், கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்த ஷாம்பு கலவையை உங்கள் தலைமுடியில் தடவி, அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் மென்மையாக மசாஜ் செய்தவாறு அலசவும்.
இந்த ஷாம்பு கலவையைத் தொடர்ந்து பயன்படுத்துவது உங்கள் நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கும். இதை வாரத்திற்கு மூன்று முறை இல்லை என்றால் நீங்கள் குளிக்கும் போது பயன்படுத்தலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |