காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மையா? கட்டாயம் சாப்பிடுங்க
தினமும் காலையில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஊற வைத்த பாதாம்
பாதாமில் வைட்டமின் ஈ, புரோட்டீன், நார்ச்சத்து இவைகள் ஏராளமாக உள்ள நிலையில், இவற்றினை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் சாப்பிட்டு வந்தால் எண்ணற்ற நன்மையினைப் பெற முடியும்.
இவை மெட்டபாலிசத்தை சீராக்கி நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு உதவி செய்கின்றது. மேலும் மூளை, இதயம் மற்றும் செரிமான மண்டலத்திற்கு தேவையான சத்துக்களை வழங்குகின்றது.
இன்று பெரும்பாலான நபர்கள் ஊற வைத்த பாதாமை தோல் உரித்து சாப்பிடுகின்றனர். இதற்கான காரணங்கள், கிடைக்கும் நன்மையினை விரிவாக தெரிந்த கொள்ளலாம்.

நன்மைகள் என்ன?
ஊற வைத்த பாதாமை உட்கொள்ளும் போது செரிமானம் எளிதாவதுடன், பாதாமின் தோலில் டானின் என்ற என்சைம் தடுப்பான் உள்ள நிலையில், இவை ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதை தடுக்கின்றது. ஆதலால் ஊற வைக்கும் போது இந்த டானின் நீக்கப்படுவதால் செரிமான என்சைம் எளிதாக சுரந்து வயிறு உப்புசம், செரிமான கோளாறுகளை நீக்கும்.

Riboflavin மற்றும் L carnitine பாதாமில் இருப்பதால் இவை மூளை செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், அறிவாற்றல் திறன் குறைவதையும் தடுக்கின்றது. மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைப்பதுடன், ஞாபக சக்தி மற்றும் விழிப்புணர்வு அளவும் அதிகரிக்கின்றது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நிறைந்துள்ளதுடன், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பும் காணப்படுகின்றது. கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்க உதவுவதுடன், ரத்த அழுத்த அளவையும் கட்டுக்குள் வைக்கவும் இதயநோய் வராமல் தடுக்கவும் செய்கின்றது.

இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை அளிப்பதுடன், பசியை குறைத்து, தேவையற்ற உணவுகளை சாப்பிடுவதை தடுக்கின்றது. ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும் செய்வதால் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

பாதாமில் உள்ள வைட்டமின் ஈ என்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டுகள், ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து சரும செல்களை பாதுகாக்கும். தொடர்ந்து சாப்பிடுவதால் சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் போன்ற அறிகுறிவை தடுத்து சருமத்தை பாதுகாக்கின்றது.
எவ்வாறு சாப்பிட வேண்டும்?
பாதாமில் உள்ள தோலில் பைடிக் அமிலம், இரும்பு - ஜிங்க் போன்ற தாதுக்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கின்றது. ஆதலால் தோலை உரித்து சாப்பிடுவதே சிறந்ததாகும்.
பாதாமை 6 முதல் 8 மணி நேரம் ஊற வைப்பது கட்டாயமாகும். நாள் ஒன்றிற்கு 5 முதல் 8 பாதாம் ஊற வைத்து சாப்பிடலாம்.
வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் சிறந்தது ஆகும். சிறுநீரக கல் பிரச்சனை, நட்ஸ் அலர்ஜி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலேசானைக்கு பின்பு சாப்பிடவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |