மாமியாருடன் கடும் சண்டையிட்ட பிரபல வில்லி நடிகை! காரணம் என்ன?
பிரபல வில்லி நடிகை ஒருவர் தனது மாமியாருடன் சண்டையிட்டுள்ள கொமடி நிகழ்வு இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பாக்கிக் கொண்டிருக்கும் சீரியலான ரோஜா சீரியலில் வில்லி கதாபாத்தில் நடித்தவர் ஷாமிலி.
சன் குடும்ப தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார். அவருடைய நடிப்பை ரசிகர்கள் பெருமளவு ரசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீரென சீரியலில் இருந்து விலகினார்.
இவர் கர்ப்பமாக இருந்த நிலையில், சமீபத்தில் பெண் குழந்தை ஒன்றினை பெற்றெடுத்தார். இந்நிலையில் தனது அம்மாவீட்டில் இருந்த இவர் தனது மாமியார் வீட்டிற்கு செல்கையில், விளையாட்டாக தனது முடியினை ஆண் போன்று செட்டப் செய்து ஏமாற்றியுள்ளார்.
சிவராத்திரி அன்று தனது மாமியாரை பிராங்க் செய்ய, முடியை வெட்டி விட்டது போல் ஏமாற்றி மாமியாருடன் சண்டைக்கு போன வீடியோ பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அதாவது ஷாமிலி பாய் கட் செய்த முடி போல் டோப்பா மாற்றிக் கொண்டு மாமியாரை போய் பார்க்கிறார். அவரின் மாமியார் ஷாமிலியை பார்த்து ஷாக் ஆகிவிடுகிறார். உடனே காரணத்தை கேட்டு ஷாமிலியிடம் சண்டை போடுகிறார்.
பதிலுக்கு ஷாமிலி சண்டை போடுவது போல் நடிக்கிறார். உடனே ஷாமிலி மாமியார் தனது மகனுக்கு ஃபோன் செய்து எல்லாவற்றையும் சொல்லி விடுகிறார். எப்படி கோயிலுக்கு போவது என புலம்பி விட்டு மன வருத்தத்துடன் ரூமுக்கு சென்று விடுகிறார்.
ஆனால் கடைசியில் ட்விஸ்டாக ஷாமிலி டோப்பாவை கழட்டிவிட்டு புடவை கட்டிக் கொண்டு மாமியார் முன்னாடி போய் சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளார்.