மருத்துவ ஆலோசனையில் ஷாருக்கான் மகன் கொடுத்த வாக்குறுதி: வெளியான பரபரப்பான தகவல்
போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகனுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், அவர் கூறிய தகவலை போதை தடுப்பு பிரிவு அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தான் விடுதலை செய்யப்பட்ட பிறகு அனைவரும் பெருமை கொள்ளும் செயல்களைச் செய்வேன் என என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவிடம் ஆர்யன் கான் தெரிவித்துள்ளாராம்.
விடுதலைக்குப் பிறகு ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இன்னொரு முறை தவறான காரணங்களுக்காகத் தனது பெயர் செய்தித்தாள்களில் வராது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
போதை பொருள் விவகாரத்தில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட போது 2 பெண்கள் உட்பட 10 பேர் மொத்தம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.