சிறையில் இருக்கும் அண்ணன்: சமூக வலைத்தளத்தில் ஷாருக்கான் மகள் செய்த காரியம்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் பிரபல நடிகையின் முகம்சுழிக்கும் புகைப்படத்திற்கு ஷாருக்கானின் மகள் சுஹானா கான் கொடுத்திருக்கும் கருத்து ரசிகர்களை திட்டித் தீர்க்க வைத்துள்ளது.
பிரபல ஹாலிவுட் டிவி நடிகையும் மாடல் அழகியுமான கைலி ஜென்னர்ஸ் தற்போது இரண்டாவது கர்ப்பமாக இருக்கும் நிலையில், புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ஆம் ரத்த வெள்ளத்தில் ஆடை இல்லாமல் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளது உலகளவில் வைரலாகி வருகின்றது.
கைலி ஜென்னர்(24) கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் டிராவிஸ் ஸ்காட்டை காதலித்த நிலையில், 2018ம் ஆண்டு ஸ்டொர்மி வெப்ஸ்டர் என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பின்பு 2019ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்து, பின்பு கொரோனா லாக்டவுனில் ஒன்றாகவே இருந்தனர். இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கின்றார். முன்னதாக டைகா என்பவரை 2014ல் திருமணம் செய்து 2017ல் விவாகரத்து செய்தார் கைலி ஜென்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இவர் தனது அழகு சாதன பொருளை அறிமுகம் செய்ய வெளியிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டாவது முறையாக கர்ப்பிணியாக இருக்கும் போது ஏன் இப்படி அசிங்கமாக போஸ் கொடுத்திருக்கீங்க.... பார்க்கவே பயங்கர அதிர்ச்சியாக உள்ளது. அழகு சாதன பொருளை அறிமுகம் செய்ய இப்படியா போட்டோஷூட் செய்வது என அக்கறையுடன் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
ஆனால் ஷாருக்கானின் மகளான சுஹானா கைலியின் தீவிர ரசிகை என்பதால் லைக் செய்து தம்ப்ஸ் அப் கொடுத்துள்ளது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
ஷாருக்கானின் மகனும் சுஹானா கானின் சகோதரனுமான ஆர்யான் கான் போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், ஷாருக்கானின் மகள் சுஹானா கான் இன்ஸ்டாகிராமில் செம பிசியாக உள்ளாரே என நெட்டிசன்கள் ட்ரோல் செய்யவும் ஆரம்பித்துள்ளனர்.