செவ்வாய் பெயர்ச்சி; இன்று முதல் இந்த 4 ராசிக்கு பொற்காலம் தானாம்!
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகத்தின் ராசியும் மாறுபடும். இவற்றில் செவ்வாய் ராசியின் மாற்றம் வாழ்க்கையின் பல முக்கிய அம்சங்களை பாதிக்கிறது.
செவ்வாய் 2022 அக்டோபர் 14 வரை இந்த ராசியில் இருக்கும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் காணப்படும்.
இந்த செவ்வாய் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பொழியப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் நுழைவதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த நேரத்தில் ரிஷப ராசிக்கார்ரகள் பெரிய பிரச்சனைகளிலிருந்து விடுபடுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். தேர்வு, நேர்காணலில் வெற்றி பெறலாம். தொழிலில் நல்ல காலம் தொடங்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் மாற்றம் பண பலன்களைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய, நல்ல வேலை கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். நீங்கள் கடன் தொல்லையில் இருந்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சியால் நன்மையான பலன்களைத் தரும். பல தரப்புகளிலிருந்து பணம் ஈட்ட பல வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
மேலும், பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நீங்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதை இப்போது செய்யலாம்.
இந்த காலத்தில் செய்யப்படும் முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரமும் நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி நல்ல பலன்களை தரும். அவர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகள் முடிந்து மகிழ்ச்சி பிறக்கும்.
வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். தனுசு ராசிக்காரர்கள் கையில் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மேலும், இது ஒரு பொன்னான நேரம் என்பதை உங்களுக்கு நடக்கும் நல்ல விஷயங்களால் அறிந்துகொள்வீர்கள்.