சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிர் விட்ட சீரியல் நடிகை
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகை வாஹினி தற்போது சிகிச்சைக்கு பணமில்லாமல் உயிரிழந்துள்ளார்.
சீரியல் நடிகை வாகினி
பிரபல சீரியல் நடிகை இவர் திரைப்படத்திலும் நடித்துள்ளார் புற்றுநோயால் காலமானார். சின்னதிரையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் இவர் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைத்துள்ளார்.
இவர் பல நாட்களாக மார்பக புற்றுநோயால் பாதிக்கபட்டு வந்துள்ளார். ஆனால் இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறாமல் அப்படியே விட்டு விட்டதால் தற்போது அந்த நோய் முற்றி அதை குணப்படுத்த அதிக பணம் தேவைப்பட்டுள்ளது.

ஆனால் தன்னிடம் அதிக பணம் இல்லாத காரணத்தினால் இவர் நேற்று புதன்கிழமையன்று உயிரிழந்தார். வாஹினியின் மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
அவரின் மறைவுக்கு ஏராளமானோர் சோசியல் மீடியா பக்கத்தில் அவர்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இவரின் பல உறுப்புக்கள் இந்த புற்றுநோய் காரணமாக செயலிழந்துள்ளது.

இதனால் ஐசியூ மற்றும் கீமோதெரபி சிகிச்சையால் மருத்துவ செலவுகள் அதிகரித்தன. சிகிச்சைக்கு ரூ.35 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் வாஹினியிடம் பணம் இருக்கவில்லை.
கராத்தே கல்யாணி உதவிய போதும் பணம் போதாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக சிகிச்சை செய்து கொள்ளாமல் இவர் உயிர் இழந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |