“எனக்கும் எனது மகனுக்கும் ஒரே வயது தான்” - சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன் பேட்டி
சீரியல் நடிகை மீரா சீரியலில் நடிக்கும் போது அவர் வெளி உலகத்திற்கு எப்படி அறியப்பட்டார் என்பது பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கவலையாக பேசி உள்ளார்.
சீரியல் நடிகை மீரா கிருஷ்ணன்
நடிகை மீரா கிருஷ்ணன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு நடிகை. இந்த நிலையில் தற்போது மீரா கிருஷ்ணன் பேட்டியில் கூறிய விடயங்கள் தற்போது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
மீரா கிருஷ்ணன் வெறும் சீரியல் நடிகை மட்டுமல்ல. ஒரு செய்தி வாசிப்பாளரும் தான். சன்டிவியில் செய்து வசித்துகொண்டு இருந்த சமயத்தில் தான் அவருக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதன் பின்னர் சன் டிவியில் நாயகி மற்றும் சித்தி 2 சீரியல்களில் நடித்துள்ளார். அதேபோல் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்துள்ளார்.
இவர் நடித்துள்ள சீரியலில் எல்லாம் இவரது கதாபாத்திரம் மிகவும் ரசிக்க தந்ததாக இருக்கும்.
இதனாலேயே இவர் பல ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நாயகி சீரியல் இயக்குனர் பற்றியும் அவர் அந்த சீரியலில் நடித்த கதாபாத்திரத்தை பற்றியும் பேசி உள்ளார்.

நாயகி சீரியல்
பேட்டியில் அவர் கூறியதில் ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட விடயம் தனக்கும் நாயகி சீரியலில் தனக்கு மகனாக நடித்த சின்னத்திரை நடிகர் திலீப்புக்கும் ஒரே வயது என்றது தான்.
இது குறித்து தொடர்ந்து அவர் பேசும் போது “எனக்கும் நாயகி சிரியலில் எனக்கு மகனாக நடித்த திலீப்பிற்கும் ஒரே வயது தான்
திலீம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை அவர் நேரடியாக இயக்குனரியடம் போய் அவருக்கும் எனக்கும் ஒரே வயது தான் நான் எப்படி அவருடைய மகனாக நடிக்க முடியும் சார் என கேட்டார்.

இதன் பின்னர் திலீப்பும் தனிப்பட்ட வாழ்க்கை வேறு சினிமா வாழ்க்கை வேறு என புரிந்துகொண்டு சீரியலில் சிறப்பான கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கொடுத்தோம்.
ஆனால் அப்போதே என்னை பலரும் நான் 50 வயதுக்கு மேல் இருப்பேன் என்று கூறினார்கள். ஆனால் எனக்கு அப்போது 30 வயது தான் ஆனது. அதேபோல் இப்போதும் எனக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

ஆனால் எனக்கு இன்னும் 40 வயது கூட ஆகவில்லை. மற்றவர்கள் என் தோற்றத்தை வைத்து வயதை எடை போடுவதெல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டேன்.
இது தான் என் கதாபாத்திரற்கான அங்கிகாரம் என நினைப்பேன் என அவர் கூறி உள்ளார்”. இவர் பேசிய இந்த காணொளி தற்போது மக்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |