பிரபல நடிகருடன் நடிகை ரகசிய திருமணம்! கர்ப்பமாகிய பின்பு லீக்கான திருமண புகைப்படம்
பிரபல சீரியல் நடிகை மற்றும் சீரியல் நடிகை அர்னவ் ரகசிய திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நடிகை கர்ப்பமாக இருக்கும் நிலையில், திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.
நடிகர் அர்ணவ், திவ்யா தம்பதிகள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'செல்லம்மா' சீரியல் நாயகன் அர்ணவ், 'செவ்வந்தி' சீரியல் நடிகையை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற 'கேளடி கண்மணி' தொடரில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர்கள் அர்ணவ் மற்றும் திவ்யா.
இந்த சீரியலில் நடித்த போது, இருவரும் நட்பாக பழகிய நிலையில், பின்பு காதலிக்க தொடங்கினர். 2017ம் ஆண்டு காதலிக்க தொடங்கிய இந்த ஜோடி திருமணமும் செய்து கொண்டனர்.
கர்ப்பமாக இருக்கும் நடிகை
அர்ணவ் முஸ்லீம் என்பதால் இவர்களின் திருமணம், முஸ்லீம் மற்றும் இந்து முறைப்படி நடந்துள்ளது. திருமணம் நடந்த போது, இது குறித்து வெளியே சொல்லாத இந்த ஜோடி, கர்ப்பமான பின்னர் தங்களுடைய திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு மாதம் கர்ப்பமாக இருக்கும் திவ்யாவுக்கு ஒரு பக்கம் வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.
தற்போது இவர், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், 'செவ்வந்தி' தொடரில் நாயகியாகவும், அர்ணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், செல்லம்மா தொடரில் நாயகனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

