TRPகாக பிரபல ரிவி செய்த செயல்.... மரண பயத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்! சென்றாயன் வெளியிட்ட கதறல் காணொளி
பிரபல ரிவியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விஜய் டிவியின் பிக்பாஸில் கலந்து கொண்ட ஜோடிகளை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன் பிரம்மாண்டமாக அரங்கேற்றினர்.
இதற்கு நடுவராக நகுல் மற்றும் ரம்யா கிருஷ்ணன் பங்கேற்று நிகழ்ச்சியை நடத்திவரும் நிலையில் தற்போது புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
இதில் கலந்துகொண்ட பிரபலங்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. முதலில் கேப்ரில்லாவிற்கு தொற்று ஏற்பட்ட நிலையில், அவருடன் நடனமாடிய ஆஜீத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மூன்றாவது நபராக சென்றாயனுக்கு தொற்று உறுதியாகியுள்ளதை அவர் காணொளி மூலம் வெளியிட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியினை தொடங்குவதற்கு முன்பு, கொரோனா டெஸ்ட் அனைவருக்கும் எடுத்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்படி மக்கள் வெளியில் போராடிக் கொண்டு வரும் சூழ்நிலையில், பிரபல ரிவி டிஆர்பியை ஏற்றுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது நியாயமா என்பது போன்ற சமூக ஆர்வலர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பாஸ் பிரபலங்களில் இன்னும் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்று கேள்வி எழுந்து வருகின்றது.